அரச வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் அபாயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட்டால் ஊழியர் மக்கள் போராட்டம் வெடிக்கும் எனவும், அதனை நாடாளுமன்றத்தினால் கூட கட்டுப்படுதத முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் தேசிய சபை ஊடாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நம்பிக்கையை பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பினால் தேசிய தொழிற்துறையினர் மேசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தின் ஊடகாக மாத்திமே தீர்வு காண முடியும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor