யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

யாழ்.காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[https://jaffnazone.com/news/

நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மினவர்கள் ஜெயதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

கைதானவர்கள் விபரம்;
1. விஜி – சின்னத்தம்பி (வயது-28)

2.தினேஷ் – அஞ்சப்பன் (வயது-26)

3.ரஞ்சித் – குருநாதன் (வயது-27)

4. பக்ரிசாமி – சாமிநாதன் (வயது-45)

5.கமல் – (வயது-25)

6.புணுகு – சுருளி (வயது-41)

7. கார்த்திக் – (வயது-27)

Recommended For You

About the Author: webeditor