வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு

வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகவும் வழக்குத் தாக்கல் செய்யவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor