யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

யாழில் இருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வானும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் வானில் பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin