கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக வை.ஆர்.சேரசிங்க நியமனம்!

கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக வை.ஆர்.சேரசிங்க நியமனம்!

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய றியர் அட்மிரால் பீ.விதான 55 வயது பூர்த்தியடைந்தமையால் 2024.09.13 ஆம் திகதியன்று ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தற்போது கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் றியர் அட்மிரால் வை.ஆர்.சேரசிங்கவை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin