கிராண்ட்பாஸ் துப்பாக்கிப் பிரயோகம்: கொலையாளிகள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிப்பு!

கொழும்பு கிராண்ட்பாஸ்பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஹங்வெல்ல அம்குகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (17) அதிகாலை 4 மணியளவில் காரை எடுத்துக். கொண்டு விஹாரை ஒன்றின் வளாகத்துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அங்கு கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வருவதாக பொலிஸார் கூறுகிறார்.

Recommended For You

About the Author: admin