பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது!

பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது!

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் கடமைக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin