இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் வாராந்தச் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் (ரொறன்ரோ, கனடா) அவர்களின் அனுசரணையுடன் சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில்
நிகழ்ச்சித் தொடர் வரிசையிலே, 38 ஆவது . சொற்பொழிவு நிகழ்வு ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு வட்டுவில் முருகமூர்த்தி அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் 16.09.2022 வெள்ளிக்கிழமை மாலை 03.30 மணிக்கு இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி ஜெ.உதயகலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நாவலர் குருபூஜை, மற்றும் தலைமையுரை நிகழ்வுகளைத் தொடர்ந்து, “ தம் சமூகம் வாழச்சேவகம் செய்த நாவலர் பெருமான் ” எனுந் தொனிப்பொருளில் சைவப்புலவர் பொன்.சந்திரவேல் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவிலிருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor