இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்த பாகிஸ்தான்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இஸ்லாமாபாத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாகிஸ்தான் திங்களன்று (07) நிராகரித்தது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லும் தூதுக்குழுவை எஸ்.ஜெய்சங்கர் வழிநடத்துவார் என்று இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
எனினும், பாகிஸ்தான் பயணத்தின் போது இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை ஜெய்சங்கர் நிராகரித்தார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் எஸ்.ஜெய்சங்கரின் வருகை குறித்து பேசுகையில்,
ஒக்டோபர் 15 முதல் 16 வரை SCO உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் 23 ஆவது மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெறும்.
மாநாட்டில் பங்கெடுப்பதற்கான இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்க தயாராக உள்ளோம். எஸ்.ஜெய்சங்கரின் வருகையானது பலதரப்பு நிகழ்வுக்காகவே உள்ளது. பாகிஸ்தான்-இந்திய உறவுகளைப் பற்றி விவாதிப்பதற்காக அல்ல என்றும் கூறினார்.
கடந்த ஒன்பது வருடங்களின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதனால், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய இந்திய வெளிவிகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் பற்றிய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக அவர் 2015 டிசம்பரில் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin