இரு மாணவர்கள் சடலங்கலாக மீட்பு – பிக்கு ஒருவர் உயிருடன் மீட்பு

இரத்தினபுரி அங்கம்மன ஆற்றின் இறங்கு துறையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரண்டு பாடசாலை சிறுவர்கள் நேற்று (6) பலியாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் பிரிவெனா ஒன்றின் மாணவர்கள் எனவும், குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாகவும் இவர்களது இருவரின் சடலங்களும் இந்த ஆற்றின் மணல் அகழும் இடம் ஒன்றில் கரையொதுங்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்துவர தெனுவன் மற்றும் பெதும் இமல்ஷ ஆகிய இரு மாணவர்களுமே மரணித்துள்ளனர். இவர்கள் இருவரும் இரத்தினபுரி மற்றும் அயகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதேவேளை இதே இடத்தில் நீராடிக் கொண்டிருந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கியபோது உயிர் காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin