இஸ்ரேல் செல்வோருக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக வேலை நிமித்தம் இஸ்ரேலுக்கு வரவிருக்கும் இலங்கையர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு அவர்களுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எவரும் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையினை விடுக்கவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin