கறுப்பு ஜூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்

கறுப்பு ஜூலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் எம். பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நினைவேந்தல் நிகழ்வுகள் நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். அதைவிடுத்து வெறுமனே ஒப்பாரிகளுடன் மட்டும் முடிவடையக் கூடாது.

1977ஆம் ஆண்டு பிரசார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்ரப் உரையாற்றும்போது தமிழ் மக்களுக்கு அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவேன் என்று முழங்கினார்.

இதே போன்று மறைந்த தொண்டமான் சமஷ்டித் தீர்வை எட்டுவதில் ஓர் அங்கமாகச் செயற்பட்டவர் என்ற ரீதியில் வடக்கு கிழக்கில் வாழும் மலையகத் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்படும் போதே எமது இலக்கை உறுதியாகக் கொண்டு செல்ல முடியும்.

அஷ்ரப் மற்றும் அமிர்தலிங்கம் இடையே காணப்பட்ட ஒற்றுமையும் தமிழின உணர்வும் எந்தளவு தூரம் இருவரிடமும் காணப்பட்டது என்பதற்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. தற்போது சிலர் ஒற்றுமை எனக் கூறுகின்றார்கள். தேர்தல் காலங்களில் வருகின்ற ஒற்றுமை பின்னர் பிரிந்து அரசியல் செய்வது. இதுதான் எங்களிடம் காணப்படுகின்ற ஒற்றுமை.

அஷ்ரப், அமிர்தலிங்கம் போன்ற- வர்களின் ஒற்றுமை தமிழ் – முஸ்லிம் மக்களிடம் மீண்டும் ஏற்படுமானால் சமஷ்டி நோக்கிய பயணம் இலகுவானதாக அமையும்.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு வேண்டும் என்று வீரப் பேச்சுக்கள் பேசுவதால் பயனேதும் கிட்டப் போவ- தில்லை. மூளையை உபயோகித்து எமது அரசியலை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் 75 வீதமானவர்கள் சிங்களவர்கள். மீதமுள்ள 25 வீதமான தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்தால் நாடாளுமன்றத்தில் சுமார் 50 ஆசனங் களையாவது பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. இருந்தால் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்கள் காணப்படுவார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் வாக்களிக்காவிட்டால் தெற்கு பலமாக அமைந்து விடும். இரண்டுக்கும் மேற்பட் டவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களாகப் போட்டியிடும் சந்தர்ப்பங்களில் எமது வாக்குகள் பேரம் பேசும் சக்தியாக மாறும்.

இந்தப் பேரம் பேசும் சக்தியாக அரசி யல் தலைமைகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கும்போது எமது மக்க ளுக்குப் பயன்பெறக்கூடியதாக அமையும்.

ஆகவே, சமஷ்டி தீர்வை நோக்கிய பயணத்தில் அதனை அடைவதற்கு சாம்பலில் இருந்து புறப்படும் பீனிக்ஸ் பறவை போல் நாங்கள் எழ வேண்டும்.” என்றார்

Recommended For You

About the Author: admin