பிரச்சாரத்தை ஆரம்பிக்க போகும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகியுள்ள சஜித் பிரேமதாசவின் பிரச்சார முகாமையாளர் லக்ஷ்மன் பொன்சேகாவிற்கு பதிலாக சட்டத்தரணி ரவி ஜயவர்தன புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நியமனங்கள் எதிர்காலத்தில் மேலும் மாறலாம் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா கொடுக்கும் அழுத்தத்தின் அடிப்படையில் பல உடனடி மாற்றங்கள் ஏற்படலாம் என்பது கட்சிக்குள் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை கம்பஹா மாவட்டத்திற்கு நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் இருவரை பிரச்சார நடவடிக்கைகளின் தலைவராக நியமிக்க சஜித் பிரேமதாச ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிழ்ச்சி நிரலை சஜித் பிரேமதாச தயாரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Recommended For You

About the Author: admin