கிளப் வசந்த கொலை 21 வயது யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுருகிரிய பிரதேசத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டதன் பின்னர் கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன் பின்னர் நீதிமன்றத்தால் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் யுவதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin