முதலாவது தேசிய மாநாட்டிற்கு தயாராகும் தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin