இலங்கையில் தேர்தல் சட்டம் அமுலில்

அரசியலமைப்பின் 104 ஏ பிரிவின்படி தேர்தல் சட்டம் இன்னும் அமலில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், வாக்குப்பதிவு நிறைவடையாததாலும் தேர்தல் சட்டம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் சட்டம் செல்லுபடியாகும் காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும்/குழுவும்/வேட்பாளரும் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் வகையில் செயல்படக்கூடாது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அரச சொத்துக்கள் எதனையும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: admin