பரம ஏழையும் பணக்காரனாக வழிபாடு

தெய்வ வழிபாட்டில் இன்றியமையாத பொருட்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் மலர்கள். அதிலும் குறிப்பாக வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வ வழிபாட்டிற்கு நாம் உபயோகப்படுத்துவோம்.

ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த மலர்களை வைத்து நாம் அர்ச்சனை செய்து வழிபாடு செய்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் நமக்கு பலாபலன்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் எந்த மலரை தினமும் கையில் வைத்து பூஜை செய்தால் நம்முடைய பணரீதியான கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பரம ஏழையும் பணக்காரனாக வழிபாடு

பணரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வணங்கக்கூடிய தெய்வமாக கருதப்படுபவள் மகாலட்சுமி தாயார் தான். மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த மலராக கருதப்படுவது மல்லிகை பூ தான். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் காரண கர்த்தாவாக திகழக் கூடியவர்கள் நவகிரகங்கள்.

அப்படிப்பட்ட நவகிரகங்களில் பணரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கும் வழிவகை செய்யக்கூடிய கிரகமாக திகழக்கூடியவர் சுக்கிர பகவான். அதனால் நாம் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைத்தால் சுக்கிர பகவானை வழிபட வேண்டும்.

மகாலட்சுமி தாயாரை வழிபடுவதோடு சுக்கிர பகவானையும் சேர்த்து நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை இனிமையான வாழ்க்கையாக மாறும். சுக்கிர வசியம் பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. சுக்கிரனுக்குரிய பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

அதே சமயம் வெள்ளிக்கிழமை அன்று நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. மேலும் சுக்கிர பகவானுக்குரிய எந்த பரிகாரங்களையும் வழிபாடுகளையும் நாம் செய்வதாக இருந்தால் வெள்ளிக்கிழமை தான் தேர்வு செய்வோம். காரணம் வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமை.

வெள்ளிக்கிழமை மட்டும் பணம் வந்தால் போதுமா? அனுதினமும் வர வேண்டும் என்றால் அனுதினமும் நாம் சுக்கிர பகவானே வழிபாடு செய்ய வேண்டும். அப்படி தினமும் சுக்கிர பகவானை வழிபாடு செய்வதற்குரிய ஒரு எளிய வழிமுறையை பற்றி பார்ப்போம்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு பன்னீர் ரோஜா வேண்டும். வேறு எந்த மலர்களையும் உபயோகப்படுத்தக் கூடாது. இரண்டே இரண்டு இதழ்கள் இருந்தால் கூட போதும். வீட்டு பூஜை அறையில் காலையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் இரண்டு பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து சம்மணம் போட்டு அமர்ந்து பணக்காரனாக வேண்டும் என்னுடைய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு “ஓம் சுதிஹி நமஹ” என்னும் மந்திரத்தை 15 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு கையில் வைத்திருக்கும் ரோஜா இதழ்களை வாயில் போட்டு சாப்பிட்டு விட வேண்டும். பன்னீர் ரோஜா கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் பன்னீர் ரோஜாவிற்கு பதிலாக இரண்டு டைமண்ட் கற்கண்டை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உச்சரித்து முடித்த பிறகு அந்த டைமண்ட் கற்கண்டையை சாப்பிட்டு விட வேண்டும்.

வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த வழிப்பாட்டு முறையை பின்பற்றும் பொழுது அனைவருக்கும் சுக்கிர யோகம் ஏற்பட்டு எவ்வளவு பெரிய பரம ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக கூடிய யோகம் வந்து சேரும்.

பன்னீர் ரோஜாவும் டைமன் கற்கண்டும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் என்பதால் அனுதினமும் இந்த வழிபாட்டை மேற்கொண்டு விரைவிலேயே பணக்கார யோகத்தை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Recommended For You

About the Author: admin