மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை அறிமுகம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய சம்பள அமைப்பு , செயல்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை மற்றும் பதவி உயர்வு தொடர்பில் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தற்போதுள்ள 26,000 ஊழியர் பட்டியல் திருத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டன.

மின்சார சபையின் சீர்திருத்தங்களின் கட்டமைப்பு, பல்வேறு பணிகளை அமுல்படுத்தும் நேரம், வருகை உள்ளிட்டவை குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது” என்றார்.

பதில் நிறுவனங்கள், ஊழியர் மேலாண்மை, சம்பள அமைப்பு, எதிர்கால கொள்கைகள் மற்றும் பிற நிர்வாக முடிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin