கனடா கோர விபத்து: யாழ்ப்பாண இளைஞர் பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒன்டாரியோ – மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதானஇலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நயினாதீவை பூர்வீகமாக கொண்ட இளைஞர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2:30 க்கு வேகமாக பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, தூண் ஒன்றில் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை அடுத்து காரைச் செலுத்திய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin