மர்மமான முறையில் பங்களாதேஷ் பெண் இலங்கையில் கொலை

பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹொரண பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (11) அதிகாலை ஹொரணை, மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன் வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் தனது சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் வீட்டில் தங்குவதற்காக சகோதரி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 7.30 க்கு இரு பெண்களும் உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 1.45 க்கு கறுப்பு முகமூடி அணிந்திருந்த இனந்தெரியாத இருவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இறந்தவரின் சகோதரியின் கைகளை கட்டி வாயை துணியை கொண்டு சத்தமிடமல் இறுக்கக் கட்டியதுடன், இறந்தவர் தூங்கும் அறைக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் இறந்தவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் நகைகள் மற்றும் பணத்தை சந்தேகநபர்கள் எடுத்துச் செல்லவில்லை எனவும், ஆனால் அவரது அறையில் இருந்த அலுமாரியை உடைத்து ஆடைகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத நிலையில், இந்த கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin