மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி: ஏகமனதாக தேர்வு

இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது.

இதன்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளுதல், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ராகுல் காந்தி விரைவில் தீர்மானம் எடுப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin