துமிந்தவுக்கு பொது மன்னிப்பு வழங்க முயற்சி: தாம் வேண்டுமா இல்லையா ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உடன்படமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இருப்பினும், துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு சஜித்தை சுற்றியுள்ள ஏனையவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அவரை சமாதானப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தாம் வேண்டுமா அல்லது ஏனையவர்கள் வேண்டுமா என்பதை கட்சி தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பு உரிய நடைமுறைகளை பின்பற்றாது வழங்கியமையால் தம்மால் அதனை மாற்றியமைக்க முடிந்தது எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர நினைவுகூர்ந்துள்ளார்.

Recommended For You

About the Author: admin