சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிதியுதவி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களில் 3,727 குடும்பங்களைச் சேர்ந்த 11,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 07 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin