திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர்கள்

இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் வீதி கீழத் தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீயும் அவரது தாய்மாமனான முத்துக்குமாரும் காதலித்து வந்துள்ளனர்.

வீட்டார் இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்து விட்டனர்.

சுபஸ்ரீ செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். முத்துக்குமார் நிதி நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிலரிடம் பண கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார், நேற்று பகல் சுபஸ்ரீயின் தாய் வீட்டுக்குச் சென்று அங்கு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்துக்குமாரின் இறப்பு செய்தியைக் கேட்ட சுபஸ்ரீ மனமுடைந்து விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய சுபஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர் பொலிஸார்.

திருமணம் செய்து இன்பமாக வாழ வேண்டிய இருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin