![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/dd-7-818x490.jpg)
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றிருந்தது.
வவுனியா மாவட்டம் ஆண்கள் அணி சார்பில் 5 தங்கம் , 1வெள்ளி , 5 வெண்கலம் பெற்று முதலிடத்தையும், பெண்கள் அணி சார்பில் 4 தங்க பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், பயிற்றுவிப்பாளர் நிக்சன் ரூபராஜ் நெறிப்படுத்தலில் இவ் வீர வீராங்கனைகள் தயார்படுத்தப்பட்டு குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.
![வசள](https://gumlet.assettype.com/oruvan/2024-05/0b981c76-787b-4b82-b76c-2b8f2dfce3be/IMG_20240529_06152069.jpeg?format=webp&w=1000&q=80)
![5](https://gumlet.assettype.com/oruvan/2024-05/5f6ab281-ea09-47c3-964a-29d39991f2e3/IMG-20240528-WA0007.jpg?format=webp&w=1000&q=80)
![54](https://gumlet.assettype.com/oruvan/2024-05/0e3e25a8-693c-408e-b39e-56ce3e3cf92d/IMG-20240528-WA0010.jpg?format=webp&w=1000&q=80)
![ஸ](https://gumlet.assettype.com/oruvan/2024-05/dfa782e9-5874-4fb6-a0f0-31df7ac702d9/IMG-20240528-WA0002.jpg?format=webp&w=1000&q=80)