இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

“மேலும் குறித்த விமானம் நோதனை மற்றும் விசாரணைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக” அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

விமானப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் தற்போது சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin