கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 03 நாட்கள் தியானம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் வரை தியானத்தில் ஈடுபடவுள்ளார்.

பிரதமர் மோடி எதிர்வரும் 30 ஆம் திகதி டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்று ஹெலிகப்டரினூடாக கன்னியாகுமரிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவேகானந்தர் பாறையில்; உள்ள மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த மாதம் முதலாம் திகதி வரை அவர் 03 நாட்கள் தொடர்ச்சியாக தியானத்தில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin