பிரான்சில் ஆசிரியர் மீது கத்திக் குத்து தாக்குதல்: 18 வயது மாணவன் கைது

பிரான்சில் ஆங்கிலப் பாட ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட 18 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மாணவன் ஆசிரியரின் முகத்தில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியரின் உயிருக்கு எதுவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் கொலை முயற்சியோ அல்லது தீவிரவாத செயலோ அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிப்பக்கட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு கல்வி அமைச்சர் தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் “தனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் ஒட்டுமொத்த கல்வி சமூகத்துடன் உள்ளன” என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin