மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் தாய்லாந்து வீராங்கனையான ஓங்பாம்ருங்பன்னுடன் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து போட்டியிட்டார்.

இதில் சிந்து மற்றும் ஓங்பாம்ருங்கன் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றினர்.

இதனால் 3 ஆவது செட் விறுவிறுப்புக்குள்ளானது.

இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காத வீராங்கனைகள் என்றாலும் 3ஆவது செட்டில் பி.வி.சிந்து வெற்றியாளர் ஆனார்.

முடிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து.

Recommended For You

About the Author: admin