தாயைக் கொலை செய்து வேப்பமரத்தில் தொங்கவிட்ட மகன்

இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்லம் மாவட்டத்தில் உள்ள சரவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா பாய். இவரது மகன் 30 வயதான ஆஷாராம்.

நேற்று முன்தினம் இரவு உணவு தொடர்பாக ஜீவா பாய்க்கும் ஆஷா ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் ஆஷா ராமின் தந்தை மாலியா பீல் தலையிட்ட ஆஷா ராமை கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் ஆஷா ராம்.

இவ்வாறிருக்க அன்றைய தினம் நள்ளிரவில் வீடு வந்த ஆஷா ராம் அவரது தந்தை மாலியா பீல் உறங்கியதன் பின்னர், கட்டை மற்றும் செங்கற்களால் தாய் ஜீவா பாயை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயத்துக்குள்ளான ஜீவா பாய் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தாயின் உடலை வீட்டு முற்றத்திலுள்ள வேப்பமரத்தில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் போல் பாவனை செய்ய முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் மாலியா பீல் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு விரைந்து வந்த பொலிஸார் ஜீவாபாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவான ஆஷாராமை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin