அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமி

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவளது அக்காவின் காதலனால் பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin