வெடித்துச் சிதறிய தொழிற்சாலை: 8 பேர் உடல் கருகி பலி; 48 பேருக்கு பலத்த காயம்

மகாராஷ்டிராவின் தாணே மாவட்டம், டோம்பிவிலி பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையின் இரசாயன உலை வெடித்துச் சிதறியதில் 2 பெண்கள் உட்பட மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 48 பேர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று வியாக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவிலேயே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், தமது மீட்புப் பணியை தொடங்கியுள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.

மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த குறித்த ஆலை கடந்த சில தினங்களுக்கு முன்பே செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் அருகிலிருந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் என தெரிய வந்துள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைகளுக்கான பணத்தை மாநில அரசு ஏற்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் இழப்பீடு வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin