இரயிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் இரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

காலி – பூஸ்ஸ, பிந்தலிய இரயில் கடவையில் இன்று இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin