பிரதமர் மோடிக்கு கொலை பிரட்டல்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு பணியகத்தை (NIA) தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தி மொழியில் பேசிய குறித்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததன் பின்னர் அழைப்பை துண்டித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பொலிஸ் மற்றும் சைபர் கிரைம் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் சென்னை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin