இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் திகதியை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
இதன்படி, இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் குறித்த திகதியை அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் என அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிந்தார்.
அந்நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இந்நிலையில் தேர்தல் குறித்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்புக்குப் பின்னர் அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டடதையடுத்து பிரதமரானார்.
இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் முதன் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ளும் தேர்தல் இதுவாகும்.