வரலாற்றில் முதன்முறையாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட புதிய வகை எரிபொருள்

வரலாற்றில் முதன்முறையாக, இந்தியன் ஒயில் நிறுவனமான, IOC நிறுவனம் இலங்கைக்கு புதிய வகை பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து Octane 100 super type பெற்றோல் தொகுதியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

“XP100” எனப் பெயரிடப்பட்ட இந்த பெற்றோல், இந்தியாவினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது எனவும், உயர்-செயல்திறன் எஞ்சின் செயல்திறன், வேகமான முடுக்கம், மென்மையான இயக்கம் மற்றும் பிரீமியம் வாகனங்களுக்கான மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஒயில் நிறுவன இயக்குநர் வி. சதீஷ் குமார் தெரிவிக்கையில்,

“எங்கள் சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றை இலங்கை சந்தைக்கு அனுப்புவது மிக முக்கியமான தருணமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin