காதலனை மகளுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற காதலி

இந்தியா, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துபோகவே சங்ககிரி மோரூட் பிட் – 1 கிராமம் புள்ளிபாளையத்தைச் சேர்ந்த கலைவாணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கேள்வியுற்ற கலைவாணியின் கணவன் சுரேஷ் மனைவியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து 7 மாதங்களுக்கு முன்னர் சுப்பிரமணியுடன் சென்று புளியங்காயனூர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

கலைவாணியின் மகளும் தாயுடன் வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுப்பரமணி, கலைவாணியையும் அவரது மகள் நித்யஸ்ரீயையும் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த கலைவாணி, மிளகாய் பொடியை எடுத்து கள்ளக்காதலனின் கண்ணில் தூவி, அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியத்தின் தலை மற்றும் நெற்றியில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத கலைவாணி, மகளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சுப்பிரமணியத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தப்பிச்சென்ற கலைவாணியையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin