ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதலில் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

அந்த போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே அவர் 66.49 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார்.

பாரா தடகளப் போட்டிகளில் F44 பிரிவின் தடகள வீரர்களும் F64 பிரிவில் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து, இந்த போட்டியில் F64 பிரிவின் கீழ் போட்டியிட்ட இந்திய வீராங்கனை சுமித் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதில் இரண்டாமிடம் பெற்ற சமிதா துலான் 66.49 மீற்றர் தூரத்தை பதிவு செய்தார்.

மூன்றாவது வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் சந்தீப் 60.41 தூரத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

yyi

Recommended For You

About the Author: admin