புடினின் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான யுத்தம் சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான ஷெர்கி ஷோய் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பாதுகாப்பு அமைச்சராக அண்ட்ரெய் பெலோசோவ் முன்மொழியப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷெர்கியை பாதுகாப்பு சபையின் செயலாளராக நியமித்துள்ளார்.

புட்டினின் முன்னாள் KGBயான நிக்கோலாய் பட்ருஷேவுக்குப் பதிலாகவே ஷோய்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் துணைப் பிரதமராக கடமையாற்றிய பொருளாதார நிபுணரான பெலோசே புடினின் மிகவும் நம்பிக்கைக்குரிய பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

தற்போது இவர் பாதுகாப்புத் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளமையானது, உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பின்னர் புடின் மேற்கொண்ட மிகவும் முக்கியமான இராணுவ மறுசீரமைப்பாக கருதப்படுகிறது.

இந்த பதவி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin