ஈராக்கில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஈராக் நசிரியாவில் உள்ள சிறையில் அவர்கள் நேற்று (07) திங்கட்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்து குறித்த 11 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நசிரியாவில் உள்ள அல்-ஹட் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் சட்டத்தின் கீழ், பயங்கரவாதம் மற்றும் கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.