முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை நாளை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை நாளை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.

இம்மாதம் 24ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin