மோடி- புட்டின் தொலைபேசி உரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் (Vladimir Putin) மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வௌடிமீர் செலன்சிகி (Volodymyr Zelenskiy) ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

போரில் ஈடுபட்டுள்ள இருநாடுகளுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அவர் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நீண்ட காலமாக பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றது.

ரஷ்யாவின் வலிந்து தாக்கதல் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்காத இந்தியா, ரஷ்யாவிடமிருந்து அதிகளவான எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றது.

Recommended For You

About the Author: admin