3 கோடி ரூபா பெறுமதியான அம்பருடன் மூவர் கைது

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அம்பருடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொண்டரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25-30 வயதுடைய நகுலோகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நேற்று (06) தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள திமிங்கலங்களின் உடலில் இருந்து இயற்கையாக வெளியாகும் விந்து மற்றும் வாந்தி ஆகியவை அம்பர் என்று கருதப்படுவதுடன், வாசனை திரவியங்கள் உற்பத்தியாளர்கள் மத்தியில் இவை அதிக கிராக்கி கொண்டது,

நீண்ட நேரத்திற்கு வாசனை திரவியங்களின் வாசனையை பராமரிப்பதாக இது பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin