இலங்கையர்கள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் இன்று (7) காலை தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை மீட்ட மரைன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா – நெடுங்குழி பகுதியை நந்தகுமார், அவரது மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இவ்வாறு அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

நேற்று (6) மாலை மன்னாரில் இருந்து ஒன்றரை இலட்சம் கொடுத்து படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் வந்திறங்கினர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin