உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் ஹல்துமுல்ல பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்துமுல்ல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி‌ ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துப்பாக்கியுடன், ஹல்துமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: admin