யாழில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,கௌரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமர் 60 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட பெரிய நகரமான சாவகச்சேரி தென்மராட்சி பிரதேசத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஊடக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதற்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல், மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: admin