துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர் பலாங்கொடை – வெலிகபொல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin