மார்ச் முதல் மாணவர்களுக்கு மதிய உணவு

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 162 பட்டதாரிகளுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3-1 (அ) தரத்திற்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் இன்று (01) கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைப் பாடசாலைகளில் தரம் 1-5 வரையில் சுமார் 16 இலட்சம் சிறுவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்குவதற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin