பிஸ்கட், ரொட்டியை கொடுத்து கதவையும் பூட்டிவிட்டு யாத்திரை சென்ற பெற்றோர்

குளியாப்பிட்டிய, தீகல்ல பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளைகளையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவர்கள் முறையே 8,5 மற்றும் 3 வதுடையவர்கள் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் பொலிஸ் அவசர சேவை (119) ஊடாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிறுவர்களை பொலிஸ் பொறுப்பேற்றனர்.

அந்த நேரத்தில் சிறுவர்கள் மூவரும் காய்ச்சலாம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று குழந்தைகளுக்கும் பிஸ்கட், ரொட்டி போன்றவற்றை வைத்து விட்டு, பெற்றோர்கள் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின் வீடு திரும்பிய பெற்றோரை, பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த தாயை குழந்தைகளை பராமரிக்கவும் வைத்தனர்.

சந்தேகத்தின் பேரில் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளவுதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin