வாகன விபத்து ராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட இருவர் பலி

விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சர் உட்பட மூவர் காயமடைந்து ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த் பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin